இலங்கையில், இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேம்ஜயந்த கடந்த செவ்வாய் நீக்கப்பட்டார். தற்போதுள்ள நிலைமை தொடர்பில் அரசாங்கத்தை விமர்சனம் செய்தமை இந்த பதவி நீக்கத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்த பதவி நீக்கம் தொடர்பில் ஆளுந்தரப்பிலிருந்தும் எதிரணியிலிருந்தும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அண்மைக்காலமாக ஆளுந்தரப்பிலுள்ள கூட்டணி கட்சிகளிலுள்ளவர்களும் அரசின் நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்கள் முன்வைத்து வரும் நிலையில் இந்த பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.