தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்காக இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித் தீர்வினை வழங்க வேண்டும் என்பதோடு, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்காக தயார் செய்யப்பட்ட ஆவணத்தில் வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன. இதில் கையெழுத்திட முஸ்லிம் கட்சிகளும், மலையக கட்சிகளும் மறுத்துள்ளன. இதனால் பயன் ஏதும் ஏற்படப்போவதில்லை என ஈ.பி.டி.பி. அறிவித்துள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.