இலங்கையின் எல்லை தாண்டி தடை செய்யப்பட்ட முறைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தக்கோரி வட பகுதி மீனவர்கள் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் வேளையில், அத்துமீறிய நிலையில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட இந்திய மீனவர்களின் 105 படகுகளை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.
இலங்கை அரசின் இம்முயற்சி தொடர்பில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.