சீன அரசாங்கம் தனது கட்டுப்பாட்டிலுள்ள ஹாங்காங் பிராந்தியத்தில் புதிய பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய சட்டங்கள் ஹாங்காங் குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைக் கட்டுப்படுத்தவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ஹாங்காங் குடிமக்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்குவது, மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வீசாவின் கால எல்லையை நீட்டுவது என்று புதிய அறிவிப்புகளை எமது அரசு வெளியிட்டுள்ளது.
முன்னாள் பிரித்தானியக் காலனியான ஹாங்காங் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான குற்றவாளிகளை நாடுகடத்துவதற்கான ஒப்பந்தம் இடை நிறுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து SBS செய்திப் பிரிவினர் எழுதிய ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share





