சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2002 ஆம் ஆண்டு அக்டோபர் 12 எனும் இதே தினத்தில் 88 ஆஸ்திரேலியர்கள் உட்பட 202 பேர் இந்தோனேசியாவின் பாலியில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்கள் . ஆஸ்திரேலியர்களை பலிவாங்கிய பயங்கரவாத நிகழ்வுகளில் கடந்த இருபது ஆண்டுகளில் இத்தனைபேர் ஒரே தாக்குதலில் பலியானதில்லை. இதுவே மிகப்பெரிய இழப்பாக இன்றுவரை உள்ளது. பாலி குண்டுவெடிப்பு நடந்து முதலாம் ஆண்டு நினைவு அனுசரிக்கப்பட்டபோது – அதாவது 19 ஆண்டுகளுக்கு முன்பு நாம் தயாரித்து ஒலிபரப்பிய விவரணத்தை இன்றைய 20 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் கனத்த மனதுடன் மீண்டும் ஒலிபரப்புகிறோம். நிகழ்ச்சியாக்கம் றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





