பொருளாதார நெருக்கடியிலும் அரசியல் ரீதியான நெருக்கடியிலும் இலங்கை சிக்கித் தவிக்கிறது. இதற்கு நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை ஒரு காரணமாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், அதிபருக்கு இருக்கின்ற நிறைவேற்று அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு பகிர்ந்துகொள்வது தொடர்பில் அண்மை நாட்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பில் கட்சி தலைவர்கள் ஒன்றுகூடி பேசி வருகிறார்கள். இந்த நிலையில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இன்னும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என கூறப்படுகின்றது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.