போரினால் சிதைவடைந்த வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அது தொடர்பான குற்றங்களும் , கைதுகளும் அதிகரித்துள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது. இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்கனவே இது பெரும் பிரச்சினையாக காணப்படும் நிலையில், வடக்கு கிழக்கிலும் எதிர்வரும் காலங்களில் இது பெரும் பிரச்சினையாக மாறும் சூழல் காணப்படுவதாகவும் அச்சம் வெளியிடப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





