பாரம்பரிய தமிழ் நடனமான பரதநாட்டியம், கோயில்களில் நிகழ்த்தப்பட்டது. கடந்த எழுபது ஆண்டுகளாக மேடைகளில் அல்லது அரங்குகளில் ஆடப்பட்டு வருகிறது. பரதநாட்டிய நிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் கூட்டமாக அமர்ந்திருக்கையில் தான் நிகழ்த்தப்படுவது வழக்கம். ஆனால், Covid-19 கட்டுப்பாடுகள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடப்பதற்குத் தடையாக உள்ளன. ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக, பார்வையாளர்களே இல்லாத அரங்கில் ஒரு பரதநாட்டிய நடன நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது. இதனைப் பார்வையாளர்கள் தங்கள் சொந்த வீடுகளில், தமது சொந்த வசதியில் பார்க்கப் போகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்து, அதில் கலந்து கொள்ளும் நடனக் கலைஞர் கவிதா சுதந்திரராஜிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
மேலதிக விபரங்களுக்கு: https://riversideparramatta.com.au/show/panchanadai/
Share





