முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழங்கில் குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தன் அவர்களது மறைவையடுத்து திருச்சி சிறப்பு முகாமிலுள்ள ஏனையவர்களை விடுவிக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் விடயத்தில் தீவிர அக்கறை செலுத்த வேண்டும் என மனித உரிமை பேரவை வலியுறுத்தியுள்ளது. எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு எதிராக கடலிலும் தரையிலும் வட பகுதி மீனவர்கள் போராட்டம் இவைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





