தமிழகம் முழுவதும் 44 இடங்களில் இந்து சமய அமைப்பான ஆர்.எஸ்.எஸ் எனும் அமைப்பு பேரணி நடத்த உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். இதனால் நாளை நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக ஆர்.எஸ்.எஸ் அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





