அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையே செய்துகொள்ளப்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின்படி, நவுறு தடுப்பு முகாமிலுள்ள 16 பேர் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்லவுள்ளதாக The Refugee Action Coalition தெரிவித்துள்ளது.
4 ஆப்கானியர்கள், 4 பாகிஸ்தானியர்கள் மற்றும் 8 ரொஹின்யாக்கள் இவ்வாறு அமெரிக்கா புறப்படுகின்றனர்.
இதுவரை நவுறு தடுப்பு முகாமிலிருந்து 139 பேர், அமெரிக்காவில் குடியர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 155 ஆகின்றது.
இதேவேளை மனுஸ் மற்றும் நவுறு தடுப்பு முகாமிலுள்ள இன்னும் பல அகதிகள் எங்கே எப்போது குடியமர்த்தப்படுவார்கள் என்பது தெரியாதநிலையில் வாழ்ந்துவருவதாக Refugee Action Coalition-இன் Ian Rintoul தெரிவித்தார்.
