ஐ.எஸ் அமைப்புக்கு பொருளாதார ரீதியில் உதவிய குற்றச்சாட்டின்பேரில் நபர் ஒருவர் மெல்பேர்னில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மெல்பேர்னின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள Hampton Park-ஐச் சேர்ந்த 43 வயது ஆண் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மற்றுமொருநபர் வெளிநாட்டுக்குச் சென்று ஆயுதச்செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு குறித்த நபர் உதவிசெய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
16 மாதங்களுக்கு மேல் நடைபெற்ற விசாரணைகளின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக AFP உதவி ஆணையர் Ian McCartney தெரிவித்துள்ளார்.
Share
