கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக நாடு திரும்பமுடியாமல் ஆஸ்திரேலியாவில் சிக்கியுள்ள இந்தியர்களில் மற்றுமொரு தொகுதியினரை வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.
நாடுதிரும்பமுடியாமல் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை வரவழைப்பதற்கென மேற்கொள்ளப்படும் 'Vande Bharat Mission' திட்டத்தின்கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்டமூடாக கடந்த மே மாதம் முதல் உலகின் பல பாகங்களிலிருந்து விசேட விமான சேவைகள் மூலம் சுமார் 15 லட்சம் இந்தியர்கள் நாடுதிரும்பியிருந்தநிலையில், செப்டம்பர் 4 - அக்டோபர் 01-க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சிட்னியிலிருந்து டெல்லி நோக்கி 13 விமானப்பயணங்கள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால்
வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
