நவுறு மற்றும் மனுஸ் தீவிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள், உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட வேண்டுமென ஐ.நாவின் Elimination of Racial Discrimination குழு வலியுறுத்தியுள்ளது.
ஆபத்தான நிலைமைகளின் கீழ், தமது எதிர்காலம் குறித்த கேள்விக்குறியோடு, அங்குள்ளவர்கள் வாழ்வதாக இக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆஸ்திரேலிய அரசு, கடல் கடந்த தடுப்பு முகாம்களிலுள்ளவர்களை நடத்தும் முறை தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ள மூன்றாவது சுதந்திரமான மனித உரிமை அமைப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Share
