SKIP TO MAIN CONTENT

அமெரிக்கா செல்பவர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்காணல்கள் மனுஸில் ஆரம்பம்!

US refugee deal Manus Nauru
Refugees looking at the notice posted about the US resettlement deal on Manus Island. Source: Supplied

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் அங்கு குடியமர்த்தப்படுபவர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்காணல்களின் ஒரு கட்டமாக, மனுஸிலுள்ள 60 அகதிகள் அடுத்தவாரம் நேர்காணலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த வாரம் 14ம் திகதி முதல் அமெரிக்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் இந்நேர்காணல்களில் பங்கேற்கவுள்ளவர்கள், Port Moresby-க்கு செல்ல வேண்டியிருக்கும் என அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவித்தல் கொடுக்கப்பட்டவர்கள் ஆப்கான், பாகிஸ்தான் மற்றும் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை ஆஸ்திரேலியா-அமெரிக்கா இடையே செய்துகொள்ளப்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின்படி, இதுவரை பப்புவா நியூ கினி மற்றும் நவுறு ஆகிய இடங்களிலிருந்து, 54 அகதிகள் அமெரிக்காவில் குடியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now