SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் பாம்புகள் ஜாக்கிரதை!

Flickr: Ron Knight
Source: Flickr: Ron Knight

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

ஆஸ்திரேலியாவின் டஸ்மேனியா மாநிலத்தில் 4 மணிநேரத்திற்குள் 3 பேரைப் பாம்பு கடித்துள்ள நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

குறித்த மூவரது உயிருக்கும் ஆபத்தில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பல நாட்களாக நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் நிலவும் வெப்பநிலை அதிகரிப்பினால் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், இவை தொடர்பில் இரவிலும் பகலிலும் மக்கள் அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பாம்புகளை நீங்கள் அவதானித்தால், அவற்றைக் கொல்லவோ தொந்தரவு செய்யவோ முயற்சிக்க வேண்டமென்றும், அவ்வாறு செய்ய முற்படும்போதே அவை கடிக்கும் வாய்ப்பு அதிகம் எனவும், பாம்புகளைப் பிடிப்பவரான Veronica Ross   அறிவுறுத்தியுள்ளார்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now