கடந்த வருடம் ராஞ்சியில் நடைபெற்று சமநிலையில் முடிவடைந்த ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் இருவர் match-fixing எனப்படும் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டார்களா என Al Jazeera தொலைக்காட்சி கேள்வியெழுப்பியுள்ளது.
உலகளாவிய ரீதியில் நடைபெற்ற ஆட்ட நிர்ணய சதிகள் தொடர்பில் விவரணம் ஒன்றை வெளியிட்ட Al Jazeera தொலைக்காட்சி அதில் ஆஸ்திரேலிய அணி குறித்தும் கேள்வியெழுப்பியிருந்தது.
ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கட் வீரர்கள் பணம் பெற்றுக்கொண்டு match-fixing-இல் ஈடுபட்டார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாதென Cricket Australia-வின் தலைமை நிர்வாகி James Sutherland தெரிவித்துள்ளார்.
மேலும் ஆஸ்திரேலிய வீரர்கள் இச்செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என ஆஸ்திரேலிய அணியின் Test captain Tim Payne கூறியுள்ளார்.
