இன்று வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையினால் பாதிக்கப்படும் தொகுதியினராக நாட்டில் புதிதாக குடியேறியவர்களும் அகதிகளும் காணப்படுகின்றனர்.
இதன்படி ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்கள் newstart உள்ளிட்ட அரச கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு 4 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.
இதன்மூலம் எதிர்பார்க்கப்பட்ட 1.3 பில்லியன் டொலர்கள் சேமிப்புக்கு மேலதிகமாக 200 மில்லியன் டொலர்களை சேமிக்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது.
தற்போது 2 வருடங்கள் நாட்டில் வாழ்ந்திருந்தால் அரசகொடுப்பனவுகளுக்குத் தகுதிபெறுவர் என இருக்கும் சட்டத்தை மாற்றி 3 ஆண்டுகளாக மாற்றுவதற்கான சட்ட முன்வடிவு, நாடாளுமன்ற ஒப்புதலுக்காக காத்திருக்கும் பின்னணியில் இதனை 4 ஆண்டுகளாக அதிகரிக்க அரசு முடிவுசெய்துள்ளது.
இதேவேளை ஆஸ்திரேலியாவில் அகதிகளாக குடியேறியவர்கள் வேலைதேடுவதற்கு உதவும் சென்டர்லிங்கின் Jobactive சேவையைப் பெறுவதற்கு 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இதுவரை 3 மாதங்கள் வரை மட்டுமே காத்திருக்க வேண்டியிருந்தது.
இவ்வாறு காத்திருக்கும் காலப்பகுதியில் அவர்கள் தமது ஆங்கிலப்புலமையை வளர்த்துக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
