SKIP TO MAIN CONTENT

குழந்தை பராமரிப்பு திட்டத்திற்கு கணிசமான சலுகை அறிவிப்பு

குழந்தை பராமரிப்பு திட்டத்திற்கு குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு உதவ அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு 1.7 பில்லியன் டாலர் கூடுதலாக செலவு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

Child in childcare facility
Source: AAP

1 min read

Published

Updated

By Raysel

Source: SBS


Skip to article content

குழந்தை பராமரிப்பு திட்டத்திற்கு ஆண்டொன்றுக்கு 566 மில்லியன் டாலர் அரசு செலவிடும். இது Childcare Subsidy Scheme என்று அழைக்கப்படும் குழந்தை பராமரிப்பு மானியத் திட்டத்திற்காக செலவிடப்படும். இந்த நிதி உதவி அடுத்த ஆண்டு (2022) ஜூலை மாதம் நடைமுறைக்கு வரும்.

189,390 டாலருக்கும் அதிகமான வருமானம் கொண்ட குடும்பத்திற்கான அதிக பட்ச மானியம் $ 10,560 என்றிருப்பது ரத்து செய்யப்படும்.

குழந்தை பராமரிப்பு திட்டத்தின் கீழ் குழந்தை பராமரிப்பு நிலையம் செல்லும் குடும்பத்தில் ஒரு குழந்தை இருந்தால், மானியம் 65 சதவீதமாக இருக்கும். ஆனால் ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருந்தால், அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் மானியம் ஒவ்வொரு குழந்தைக்கும் 95 சதவீதமாக உயரும்.

இந்த புதிய மாற்றம் மூலம் சுமார் 250,000 குடும்பங்கள் பயனடைவர் என்று அரசு மதிப்பிடுகிறது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now