இன்று பிற்பகல் மெல்பேர்ன் Flinders Street-இல் பாதசாரிகள் மீது காரால் மோதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த காரை ஓட்டிச் சென்ற நபரும் மற்றுமொரு நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Flinders Street தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக சென்றுகொண்டிருந்தவர்கள் மீது வாகனத்தை ஓட்டிச்சென்று மேற்கொள்ளப்பட்டுள்ள இச்சம்பவம் தொடர்பில், காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்ற அதேநேரம், இச்சம்பவம் வேண்டுமென்று நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
