விக்டோரிய மாநிலத்தின் பிராந்திய இடங்களில் வைரஸ் பரவுகிறது... சிட்னியில் முடக்கநிலை மேலுமொரு மாதத்திற்கு நீட்டிப்பு

கொரோனா வைரஸ் குறித்து ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

Health workers and Police officers are seen at a unit block under lockdown, in Campsie, south west of Sydney, Friday, August 20, 2021. (AAP Image/Dan Himbrechts) NO ARCHIVING

Health workers and Police officers are seen at a unit block under lockdown, in Campsie, south west of Sydney, Friday, August 20, 2021. Source: AAP Image/Dan Himbrechts

  • தொற்று அதிகமாகப் பரவியுள்ள உள்ளூராட்சிப் பகுதிகளில் மேலதிக கட்டுப்பாடுகளை NSW அரசு அறிமுகம் செய்துள்ளது
  • விக்டோரிய மாநிலத்தின் Shepperton என்ற இடத்தில் தொற்று குறித்த தொடர்பு தடமறிதல் நடந்து வருகிறது
  • ACTயில் புதிதாக 12 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது
  • தெற்கு ஆஸ்திரேலிய மாநில எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன

 

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 644 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றுள்ளவர்களில் 41 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளார்கள்.  தொற்று ஏற்பட்டு நான்கு பேர் இறந்துள்ளார்கள்.  நால்வரும் முதல் சுற்று தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தொற்று அதிகமாகப் பரவியுள்ள உள்ளூராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அங்கு செயல்படும் வணிக நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி, திங்கட்கிழமை அதிகாலை 12:01 முதல் மேலதிக கட்டுப்பாடுகள் அறிமுகமாகின்றன.  இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  உடற் பயிற்சிக்காக, தினசரி ஒரு மணி நேரம் மட்டுமே வெளியே செல்ல முடியும் என்பது உட்பட பல இறுக்கமான கட்டுப்பாடுகள் அறிமுகமாகின்றன.

சிட்னி பெரு நகரில் முடக்க நிலை செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


 

விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 55 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  அதில் ஆறு பேருக்கு ஏற்பட்ட தொற்று, ஏற்கனவே அறியப்பட்ட தொற்றுகளுடன் தொடர்புடையவை அல்ல.  அத்துடன், தொற்றுள்ளவர்களில் 30 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளார்கள்.

Victoria மாநிலத்தின் வட கிழக்குப் பகுதியிலுள்ள Shepperton புறநகர் பகுதியில் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து அங்குள்ள மக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 

Australian Capital Territory

ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 12 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  அதில் ஒருவருக்கு ஏற்பட்ட தொற்று, எங்கிருந்து வந்தது என்பது இன்னமும் அறியப்படவில்லை.  கன்பராவில் தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 94ஆக உயர்ந்துள்ளது.

கன்பராவில் தொற்றாளர் ஒருவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தியுள்ளார்கள்.  அத்துடன், உணவு விற்பனை நிலையங்கள், குழந்தைகள் கற்றல் மையம், மருத்துவ சிகிச்சை மையம் ஆகியவையும் தொற்றாளர்கள் சென்ற இடங்கள் என்று 250ற்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நீங்கள் தடுப்பூசி போட தகுதியுள்ளவரா என்று இங்கே காணலாம்.


 

கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய செய்திகளில்:

குயின்ஸ்லாந்து மாநிலத்திலும் NT பிராந்தியத்திலும் புதிதாக யாருக்கும் சமூகப் பரவல் மூலம் தொற்று ஏற்படவில்லை

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வடக்கு மற்றும் பிராந்திய பிரதேசங்கள், மற்றும் Northern Territory மீது தெற்கு ஆஸ்திரேலிய மாநிலம் விதித்திருந்த சில எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.
alc covid mental health
Source: ALC


தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 
ACT 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 
ACT 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

Published

Updated

By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
விக்டோரிய மாநிலத்தின் பிராந்திய இடங்களில் வைரஸ் பரவுகிறது... சிட்னியில் முடக்கநிலை மேலுமொரு மாதத்திற்கு நீட்டிப்பு | SBS Tamil