- NSW மாநிலத்தில் 12 உள்ளூராட்சிப் பகுதிகளில் முடக்கநிலை நீக்கப்படுகிறது
- விக்டோரிய மாநிலத்தில் மிக அதிகமான தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர்
- Covid-19 முடக்கநிலை கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டோருக்கு ACT அரசு வழங்கும் ஆதரவு மானியங்கள் பெற தகுதி பெறுவோர் விரிவாக்கப்படுகிறது
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம் புதிதாக ஒருவருக்குத் தொற்று.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,351 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 12 பேர் இறந்துள்ளார்கள். இறந்தவர்களில் 10 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.
Lismore மற்றும் Albury ஆகிய இடங்களில் தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், இன்று மாலை 6 மணி முதல் 7-நாள் முடக்கநிலை நடைமுறைக்கு வருகிறது.
Bega Valley, Blayney, Bogan, Cabonne, Dungog, Forbes, Muswellbrook, Narrabri, Parkes, Singleton Snowy Monaro மற்றும் Upper Hunter Shire உள்ளூராட்சிப் பகுதிகளில் நடைமுறையிலிருந்த முடக்கநிலை இன்று பிற்பகல் 1 மணியுடன் முடிவுக்கு வந்தது.
விக்டோரியா
விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 514 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மாநிலத்தில் தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 4,370 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றிரவு முதல் முடக்கநிலை நடைமுறையிலிருக்கும் Ballarat நகரில் மேலதிக சோதனை தளங்கள் செயல்படுகின்றன. அத்துடன், மேலதிக தடுப்பூசிகள் வழங்கப்பட ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
Australian Capital Territory
ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 15 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எட்டுப் பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.
Covid-19 முடக்கநிலை கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டோருக்கு ACT அரசு வழங்கும் ஆதரவு மானியங்கள் பெற சுற்றுலா ஒழுங்கமைப்பாளர்கள், தங்குமிடம் வழங்குபவர்கள், கலை நிகழ்வுகள் நடத்துவோர், மற்றும் விருந்தோம்பலில் ஈடுபட்டுள்ளோர் தற்போது தகுதி பெறுவர். மேலதிக தகவல்களைக் கண்டறியவும் மானியங்களுக்கு விண்ணப்பிக்கவும் இங்கே சொடுக்கவும்.
கடந்த 24 மணி நேரத்தில்
- Northern Territory பிராந்தியத்தில், 80 சத வீதமானவர்கள் நவம்பர் மாத ஆரம்பத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்கும் வகையில் தடுப்பூசிகள் வழங்கி வருகிறது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.