விக்டோரியாவில் 37 பேர், குயின்ஸ்லாந்தில் 10 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 25 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 89 இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் 55,602 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்தில் 11,687 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது- இது கடந்த ஏப்ரலுக்குப் பின்னர் அங்கு பதிவான மிக அதிக எண்ணிக்கையாகும்.
மேற்கு ஆஸ்திரேலியா, தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா மற்றும் NT-இல் கடந்த நான்கு மாதங்களில் இல்லாதவாறு அதிகளவானோர் கோவிட் தொற்றுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள், கோவிட்-19 உள்ளிட்ட வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் மேற்பரப்புகளிலிருந்து பரவுவதைத் தடுக்கும் முதல் வகை spray coating ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
புதிய ஓமிக்ரான் துணைத்திரிபான B.2.75, மேலும் 7 சர்வதேச பயணிகளிடம் கண்டறியப்பட்டுள்ளதாக தனது வாராந்திர அறிக்கையில் NSW Health அறிவித்துள்ளது. இப்புதிய திரிபு 10 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
GP பரிந்துரை இல்லாமல், வைரஸ் எதிர்ப்பு கோவிட்-19 மாத்திரைகளை மக்கள் பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடியுமா என்பது குறித்து, தேசிய அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் மாநில மற்றும் பிராந்திய தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Moderna Spikevax தடுப்பூசிக்குTGA இன் தற்காலிக ஒப்புதல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இதற்கான இறுதி ஒப்புதலை வழங்குவது குறித்து ஆராய்ந்துவருவதாக, நோய்த்தடுப்புக்கான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
NT பிராந்தியத்தில் புதிய கோவிட் தொற்றுகள் அதிகரித்து வருவதால், மக்களை விழிப்புடன் இருக்குமாறு NT Health Acting தலைமை சுகாதார அதிகாரி Dr Charles Pain கேட்டுக்கொண்டார்.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 13,829 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 25 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 14,312 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 37 பேர் மரணமடைந்தனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 11,687 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10 பேர் மரணமடைந்தனர்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 6,960 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 பேர் மரணமடைந்தனர்.
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 5,054 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 பேர் மரணமடைந்தனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 1684 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.
ACT- இல் புதிதாக 1407 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்
NT- இல் புதிதாக 669 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ACT New South Wales Northern Territory Queensland South Australia Tasmania Victoria Western Australia
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
ACT New South Wales Northern Territory Queensland South Australia Tasmania Victoria Western Australia
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: healthdirect.gov.au/covid19
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: servicesaustralia.gov.au
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.