NSW-இல் புதிதாக 345 பேருக்கு தொற்று, இருவர் பலி! ACT-இல் முடக்கநிலை!!

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 345 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இருவர் மரணமடைந்துள்ளனர்.

ACT

Overlooking Lake Burley Griffin with Dept. of Defence in the foreground, Captain Cook water jet centre and Black Mountain top right. (AAP Photo/Alan Porritt) Source: AAP Photo/Alan Porritt

மரணமடைந்தவர்கள் 90 வயதுகளிலுள்ள இருவர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் ஒருவர் AstraZeneca தடுப்பூசியின் முதல் டோஸை போட்டிருந்த அதேநேரம் மற்றவர் Pfizer தடுப்பூசியின் இரு டோஸ்களையும் போட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து கடந்த ஜுன் மாதம் NSW மாநிலத்தில் ஏற்பட்ட கோவிட் பரவல் காரணமாக மரணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 345 பேரில் ஆகக்குறைந்தது 60 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.

இந்தப்பின்னணியில் Bogan, Bourke, Brewarrina, Coonamble, Gilgandra, Narromine, Walgett ,Warren உள்ளூராட்சி பகுதிகளிலும்  முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் Bayside, Burwood, Strathfield பகுதிகளில் இன்று பிற்பகல் 5 மிணமுதல் மேலதிக கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

தற்போது ஏற்பட்டுள்ள பரவலைக் கட்டுப்படுத்த உதவும்வகையில் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு NSW Premier Gladys Berejiklian வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் அனைவரும் முடக்கநிலையை சரியாக பின்பற்றுமாறும் அநாவசியமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தினார். 

Fairfield, Canterbury-Bankstown, Liverpool, Blacktown, Cumberland  Parramatta, Campbelltown மற்றும் Georges River ஆகிய  உள்ளூராட்சி பகுதிகளில் வாழும் பணியாளர்களில் அனுமதியளிக்கப்பட்டவர்கள் மாத்திரம் தமது உள்ளூராட்சி பகுதிகளைவிட்டு வெளியே செல்லமுடியும்.

மேற்குறிப்பிட்ட எட்டு உள்ளூராட்சி பகுதிகளுக்கு எவரையும் அநாவசியமாக செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளில்    நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை ஆகக்குறைந்தது ஆகஸ்ட் 28ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் வாழ்பவர்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்பதுடன் வேலை(அனுமதிபெற்றவர்கள் மாத்திரம்), பராமரிப்பு வழங்க அல்லது பெற, அத்தியாவசிய பொருட்களை வாங்க மற்றும் உடற்பயிற்சி போன்ற அத்தியாவசிய தேவையின்நிமித்தம் மாத்திரமே வீடுகளைவிட்டு வெளியேற முடியும்.

இதுதவிர வேறு என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்ற விவரங்களை மாநில அரசின்  இணையத்தளத்தில்  பார்வையிடலாம்.

கடந்த 24 மணிநேரத்தில் 151,830 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக மிகவும் ஆபத்தான திரிபடைந்த Delta வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இப்பரவல் ஆரம்பித்திருந்தது.

கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான  பட்டியலை  www.health.nsw.gov.au என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.

இதுஒருபுறமிருக்க விக்டோரியா மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக 21 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில்  நால்வருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் ஆறு பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Regional விக்டோரியாவில் முடக்கநிலை தளர்த்தப்பட்டுள்ள அதேநேரம் மெல்பன் பெருநகருக்கான முடக்கநிலை ஒருவாரத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.

விக்டேரிய மாநிலத்தில் என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்ற விவரங்களை மாநில அரசின்  இணையத்தளத்தில்  பார்வையிடலாம்.

கடந்த 24 மணிநேரத்தில் 45,408 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை குயின்ஸ்லாந்தில் புதிதாக 10 பேருக்கு  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவர்கள் அனைவரும் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது.

இதுஒருபுறமிருக்க ACT பிராந்தியத்தில் ஒரு வருடத்திற்கு பின்னர் சமூகப்பரவல் ஊடாக ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு ஒருவாரகால முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியும்.

Gungahlin பகுதியைச் சேர்ந்த 20 வயதுகளிலுள்ள நபருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவருக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


  • செய்தி மற்றும் தகவல்களை 63 மொழிகளில் பெற்றுக்கொள்ள:sbs.com.au/coronavirus
  • ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகள் குறித்த தகவல்களுக்கு: NSW, VictoriaQueensland,  Western AustraliaSouth AustraliaNorthern TerritoryACTTasmania.
  • கோவிட் தடுப்பூசி குறித்த தகவல்களை உங்கள் மொழியில் பெற்றிட: COVID-19 vaccine in your language.

ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் கோவிட் சோதனையை எங்கே மேற்கொள்ளலாம் என்ற விவரங்களை கீழுள்ள இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.

NSW 
ACT 
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் கோவிட் பேரிடர்கால கொடுப்பனவு எவ்வாறு உள்ளது என்பதை கீழுள்ள இணைப்புக்களுக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.

NSW 
ACT 
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான விடயங்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்லவேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதிபெறவேண்டும். இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப்போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

By SBS/ALC Content
Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
NSW-இல் புதிதாக 345 பேருக்கு தொற்று, இருவர் பலி! ACT-இல் முடக்கநிலை!! | SBS Tamil