- தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் NSW மாநிலத்திற்கு நவம்பர் முதலாம் நாளிற்குப் பின்னர் சென்றால், தனிமைப் படுத்தப்பட்டிருக்கத் தேவையில்லை
- NSW மாநிலத்திலிருந்து விக்டோரியா மாநிலம் செல்வோர் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டிருந்தால் தனிமைப் படுத்தப்பட்டிருக்கத் தேவையில்லை
- NSW மாநிலத்தின் பிராந்திய இடங்களுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நவம்பர் முதல் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 399 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் மூன்று பேர் இறந்துள்ளார்கள்.
NSW மாநிலத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதத்தை விரைவில் எட்ட உள்ளது என்பதையும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்பதையும் Premier Dominic Perrottet உறுதிப்படுத்தினார்.
மாநிலத்தில் அதிகப்படியானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டிருப்பதால், வெளி நாடுகளில் இருந்து நவம்பர் மாதம் முதல் நாளிற்குப் பின்னர் மாநிலம் வருபவர்கள் விடுதிகளிலோ வீடுகளிலோ தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற தேவை இருக்காது என்று அவர் மேலும் கூறினார். அப்படி வருபவர்கள் TGA அங்கீகரித்த தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்க வேண்டும், விமானங்களில் ஏற முன்னர் PCR சோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்; அத்துடன், விமானத்திலிருந்து இறங்கிய பின்னரும் சோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நாடு திரும்பும் நாட்டு மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வீடுகளில் 20 பேர் வரை கூடலாம், வெளி இடங்களில் 50 பேர் வரை கூடலாம்.
தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.
விக்டோரியா
NSW மாநிலத்திலிருந்து எதிர்வரும் செவ்வாய்க் கிழமைக்குப் பின்னர் விக்டோரியா மாநிலம் செல்பவர்கள், தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டிருந்தால், தனிமைப் படுத்தப்பட்டிருக்கத் தேவையில்லை.
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 2,179 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஆறு பேர் உயிரிழந்துள்ளார்கள்.
விக்டோரிய மாநிலத்திற்கு செல்பவர்கள் அங்கு சென்ற 72 மணி நேரத்திற்குள் சோதனை செய்து தொற்று இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட தொழில்களில் வேலை செய்வோர் தடுப்பூசி போட்டிருக்க வேண்டியது கட்டாயம் என்பது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றையாவது போட்டிருக்க வேண்டும் அல்லது தடுப்பூசி போடுவதற்கு முன் பதிவு செய்திருந்தால் மட்டுமே தளத்தில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.
Australian Capital Territory
ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 35 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுவரை தொற்று கண்டவர்கள் எண்ணிக்கை 1,394ஆக உயர்ந்துள்ளது. முதியோர் இல்லத்தில் வாழும் வயது எழுபதுகளிலுள்ள பெண் ஒருவர் தொற்றினால் இறந்துள்ளார்.
தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.
கடந்த 24 மணி நேரத்தில்
- Covid-19 தொற்று இருக்கிறதா என்று நாங்களாகவே சோதிக்கக்கூடிய கருவிகள் நவம்பர் முதல் மருந்தகங்களில் கிடைக்கும். மூன்று வகையான கருவிகள் விற்பனைக்கு வருகின்றன, அவை 97 சத வீதம் சரியான முடிவுகளைக் காட்டும் என்று கூறப்படுகிறது.
- NSW, விக்டோரியா மற்றும் ACTயில் நடைமுறையிலிருந்த முடக்கநிலை கட்டுப்பாடுகளால், மேலும் 138,000 பேர் செப்டம்பர் மாதத்தில் வேலை இழந்துள்ளார்கள் என்று புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ள தரவுகள் சொல்கின்றன.
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
NSW பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள், வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
