- NSW மாநிலத்தின் 12 வயதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் குடும்ப மருத்துவரிடம் தடுப்பூசி பெறலாம்.
- விக்டோரிய மாநிலத்தில் பல இரயில் சேவைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளது Covid-19 தொற்று
- ACTயில் 12 வயதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தடுப்பூசி போடலாம்
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம் புதிதாக இருவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,257 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஏழு பேர் இறந்துள்ளார்கள்.
தொற்று அதிகமாகப் பரவியுள்ள இடங்கள் என்று Greenacre, Auburn, Yagoona, Liverpool, Punchbowl, Guildford, Redfern, Bankstown, Condell Park மற்றும் Busby என்று சுகாதார அதிகாரிகள் அறிவித்தார்கள். சிட்னி நகரிலுள்ள Glebe மற்றும் Redfern ஆகிய இடங்களில் தொற்று வேகமாகப் பரவி வருவதாகத் தெரிகிறது.
வயது 12 முதல் 15 வரையிலான சிறுவர்கள் இன்று முதல் குடும்ப மருத்துவரிடம் ஃபைசர் தடுப்பூசி பெறலாம். Moderna தடுப்பூசியை அடுத்த வாரம் முதல் மருந்தகங்களிலிருந்து பெறலாம்.
தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் ஐந்து பேர் வெளியிடங்களில் கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விக்டோரியா
விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 473 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அண்மைய காலத்தில் தொற்று அதிகமாகப் பரவ ஆரம்பித்த நாட்களில் ஒரே நாளில் மிக அதிகமான தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் நான்கு குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் தொற்று அதிகமாகப் பரவிய இடங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், V/Line இரயில் ஓட்டுநர்கள் மற்றும் அங்கு பணிபுரிபவர்கள் என்று ஐந்து பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, V/Line இரயில் சேவை பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
Australian Capital Territory
ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 13 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
ACTயில் வயது 12 முதல் 15 வரையிலான சிறுவர்கள் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் ஃபைசர் தடுப்பூசியை அரச தடுப்பூசி மையங்களில் பெறலாம்.
கடந்த 24 மணி நேரத்தில்
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம் புதிதாக இருவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இருவரும், கடந்த வாரம் தொற்று ஏற்பட்ட பிரிஸ்பன் நகர பள்ளி மாணவி ஒருவருடன் தொடர்புடையவர்கள்.
- ‘12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும் Moderna தடுப்பூசி போடலாம்’ என்று தடுப்பூசி குறித்து தொழில்நுட்ப ஆலோசனை வழங்கும் ATAGI குழு பரிந்துரைத்துள்ளது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.