உச்சத்தைத் தொட்டுள்ள NSW தொற்று.... பிராந்திய விக்டோரியா மீண்டும் முடங்குகிறது

கொரோனா வைரஸ் குறித்து ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

NSW Police conduct an operation in an attempt to head off an anti-lockdown protest in Sydney, Saturday, August 21, 2021.

NSW Police conduct an operation in an attempt to head off an anti-lockdown protest in Sydney. Source: AAP Image /Dan Himbrechts

  • விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம் புதிதாக 61 பேருக்குத் தொற்று, முழு மாநிலத்திலும் முடக்க நிலை நடைமுறைக்கு வந்தது
  • பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து மிக அதிகமான தொற்றாளர்களை ஒரு நாளில் உறுதி செய்த மாநிலம் என்று NSW இன்று பதிவு செய்கிறது
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இன்றைய நாளும் புதிதாக யாருக்கும் சமூகப் பரவல் மூலம் தொற்று ஏற்படவில்லை
  • ACTயில் புதிதாக எட்டுப் பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.  தொற்றுடன் யாரும் சமூகத்தில் நடமாட வில்லை.

 

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 825 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  இதுவரை பதியப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மிக அதிகமான எண்ணிக்கை இதுவாகும்.  தொற்று ஏற்பட்டு மூன்று பேர் இறந்துள்ளார்கள்.  இறந்தவர்களில் ஒருவர் வயது தொண்ணூறுகளில் உள்ள ஆண், அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை;  இன்னொருவர் வயது எண்பதுகளில் உள்ள பெண், அவர் தடுப்பூசி முழுமையாகக் போட்டுக் கொண்டவர்; மூன்றாமவர் வயது தொண்ணூறுகளில் உள்ள பெண், அவர் தடுப்பூசியின் முதல் சுற்றைப் போட்டுக் கொண்டவர்.

முடக்க நிலைக்கு எதிராக சிட்னி நகரில் இன்று பிற்பகல் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டம் நடை பெறாமல் தடுப்பதற்காக, 1,500 காவல் துறையினரை NSW காவல்துறை பணிக்கமர்த்தியுள்ளது.  பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மூலம் சிட்னி நகரின் முக்கிய பகுதிகளுக்குப் பயணிக்க முடியாது.  அதே போல் வாடகை வாகனங்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொற்று அதிகமாகப் பரவியுள்ள உள்ளூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 16 வயதிற்கும் 39 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் கோவிட்-19 ஃபைசர் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.


விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 61 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  அதில் 39 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளார்கள்.

Victoria மாநிலத்தின் பிராந்தியப் பகுதிகளில் தொற்று பரவியிருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, பிராந்திய இடங்களில் இன்று பிற்பகல் 1 மணி முதல் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதிகள் தவிர்த்து, மெல்பன் பெரு நகரில் நடைமுறையிலுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் பிராந்திய இடங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளன.

தொற்று அதிகமாகப் பரவியுள்ள இடங்கள் மற்றும் தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


 

கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய செய்திகளில்:

  • ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக எட்டுப் பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த வருடம் முடிவதற்குள் தடுப்பூசி வழங்க ஆரம்பிக்க முயற்சிகள் எடுக்கப் படுகின்றன.
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக யாருக்கும் சமூகப் பரவல் மூலம் தொற்று ஏற்படவில்லை.  16 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மாநில சுகாதார அதிகாரிகள் வேண்டினார்கள்.
alc covid mental health
Source: ALC

 

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

4 min read

Published

Updated

By SBS/ALC Content, Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now