- நாட்டில் 70 சதவீதமானவர்கள் Covid தடுப்பூசி போட்டதும், அரசு வழங்கும் இடர் கால நிதி நிவாரணம் குறைக்கப்படும்
- விக்டோரிய மாநிலத்தில் 950 தொற்றாளர்கள்; இதுவரை கண்ட மிக அதிகமான எண்ணிக்கை இது
- NSW மாநிலத்தில் அக்டோபர் 11 முதல் முதியோர் இல்லங்களுக்குப் பார்வையாளர்கள் அனுமதிக்கப் படுவார்கள்
விக்டோரியா
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 950 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஏழு பேர் இறந்துள்ளனர்.
விக்டோரிய மாநிலத்தில் சில முடக்க நிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன, ஆனால், Latrobe Valley பகுதியில் தொற்று அதிகமாகப் பரவுவதால், அங்கு ஏழு நாள் முடக்க நிலை கட்டுப்பாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
மெல்பன் பெரு நகரில் மக்கள் 15 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம், tennis மற்றும் golf போன்ற (ஒருவர் இன்னொருவரைத் தொடாமல் ஆடக்கூடிய) விளையாட்டுகள் மீண்டும் தொடங்கலாம் என்பன உள்ளிட்ட சில கட்டுப்பாட்டு விதிகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 863 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 15 பேர் இறந்துள்ளார்கள். எதிர்பார்த்ததை விட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவானது என்று Premier Gladys Berejiklian கூறினார்.
முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஒருவரை பார்வையிட, முழுமையாகத் தடுப்பூசி போட்ட இருவர், அக்டோபர் 11 முதல் அனுமதிக்கப் படுவார்கள்.
NSW மாநிலத்தில் வசிப்பவர்களில் 86.2 சதவீதமானோர் தடுப்பூசியின் ஒரு சுற்றையும் 61.7 சதவீதமானோர் தடுப்பூசியை முழுமையாகவும் போட்டுள்ளார்கள். 12 முதல் 15 வயதினரில் 44.5 % சதவீதமானோர் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் பெற்றுள்ளார்கள்.
குயின்ஸ்லாந்து
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக ஒருவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இன்னொருவருக்குத் தொற்று கண்டறியப் பட்டாலும் அவர் NSW மாநில தரவுகளில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Gold Coast உள்ளூராட்சிப் பகுதியிலும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
முடக்கநிலை தற்போது அவசியமில்லை என்று கூறிய தலைமை சுகாதார அதிகாரி Jeannette Young, தொற்று மேலும் பரவினால் நிலமை மாறலாம் என்றார்.
கடந்த 24 மணி நேரத்தில்
- நாட்டில் 70 சதவீதமானவர்கள் Covid தடுப்பூசி போட்டதும், அரசு வழங்கும் இடர் கால நிதி நிவாரணம் குறைக்கப்படும்.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.