SKIP TO MAIN CONTENT

வாகன ஓட்டிகளுக்கு பண்டிகைக்கால எச்சரிக்கை!

Double demerits
Source: Getty Images

1 min read

Published

Updated


Skip to article content

கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக் காலத்தையொட்டி நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ACT மாநிலங்களில் வீதி விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது.

இதன்படி  இன்று 20ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 1ம் திகதி வரை வீதி விதிமுறைகளை மீறுவோர் double-demerit points தண்டனை பெறுவர்.

அதிவேகமாக செல்லுதல், Seatbelt-ஆசனப்பட்டி அணியாமை, கைபேசி பாவனை, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த தண்டனை விதிக்கப்படுகின்றது. 

School zone-பள்ளி வலயங்களில் வீதி விதிமுறைகளை மீறுவோர் double-demerit points-க்கு மேலதிகமாக இன்னுமொரு demerit point-ஐ இழக்க நேரிடும்.

வீதி விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் double-demerit points-உடன் சேர்த்து பெருந்தொகை பணத்தினையும் அபராதமாக செலுத்த நேரிடும்.

இதேவேளை மேற்கு ஆஸ்திரேலியாவில் double-demerit points தண்டனை இன்று முதல் ஜனவரி 5 வரை நடைமுறையில் இருக்கும்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பண்டிகைக்காலத்திற்கென்று சிறப்பாக double-demerit points தண்டனை  நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டஸ்மேனியா மற்றும் ஆகிய மாநிலங்களில் double-demerit points தண்டனை நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now