நாட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளும் உள்ளக நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என அறிவித்துள்ள பிரதமர் ஸ்கொட் மொறிஸன் ஆஸ்திரேலியர்களை வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தொடரும் நிலையில் தற்போது எந்தவொரு வெளிநாட்டுப் பயணத்தையும் மேற்கொள்ளாமலிருப்பது அவசியமாவதாக பிரதமர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் இவ்வாறானதொரு பயண அறிவுறுத்தல் விடுக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இதேவேளை பாடசாலைகள் தொடர்ந்து இயங்கும் எனவும் பிரதமர் ஸ்கொட் மொறிஸன் அறிவித்தார்.
Share
