விசா தொடர்பில் அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டமுன்வடிவுக்கு கீழ்ச்சபை அனுமதி!

குடிவரவுச் சட்டத்திலுள்ள Character test-நன்னடத்தை சோதனையின் அடிப்படையில், நாட்டிலுள்ள ஆஸ்திரேலியர்கள் அல்லாதவர்களின் விசாவை நிராகரித்து, அவர்களை நாடுகடத்துவதற்கு ஏதுவான சட்டத்திருத்தம் ஒன்றை அரசு நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தநிலையில் இதற்கு கீழ்ச்சபை/மக்கள் பிரதிநிதிகள் சபை(House of Representatives/Lower House) அனுமதி வழங்கியுள்ளது.

Prime Minister Scott Morrison speaks during Question Time at Parliament House in Canberra.

Prime Minister Scott Morrison speaks during Question Time at Parliament House in Canberra. Source: AAP

அடுத்து செனட் சபையின் அனுமதிக்காக இச்சட்டமுன்வடிவு சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

குடிவரவுச் சட்டத்தில் அரசு முன்மொழிந்துள்ள திருத்தத்தின் அடிப்படையில் நாட்டிலுள்ள ஆஸ்திரேலிய குடியுரிமை இல்லாத ஒருவர், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய பாரதூரமான குற்றச்செயல் ஒன்றைப் புரிந்திருந்தாலோ, அல்லது 12 மாதங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனையை அனுபவித்த ஒருவர் ஆஸ்திரேலிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் எனக் கருதப்பட்டாலோ, அவரது விசாவை நிராகரித்து நாடுகடத்தமுடியும்.

குறித்த விடயத்தில் பலரை நாடுகடத்துவதற்கு அரசுக்கு கூடுதல் அதிகாரம் தேவைப்படுவதாக குடிவரவு அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ள பின்னணியில், இந்த இறுக்கமான குடிவரவு சட்டத்திருத்தம்  நாடாளுமன்றில் விவாதத்திற்கு வந்தபோது, இதற்கு லேபர்கட்சியும் ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதிகள் சபையில் இது நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை Migration Amendment (Strengthening the Character Test) Bill என்ற இந்த சட்டத்திருத்தத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்பு மேற்கொள்ளப்பட்டபோதும், லேபர் கட்சி மற்றும் கிரீன்ஸ் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக செனட் சபையில்  போதிய ஆதரவு கிடைக்காததையடுத்து  அது கிடப்பில் போடப்பட்டது.

எனினும் தற்போது லேபர்கட்சியின் ஆதரவுடன் மக்கள் பிரதிநிதிகள் சபையில் இச்சட்டமுன்வடிவு  நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்து, இதனை  செனட் சபை ஒப்புதலுக்காக  ஆஸ்திரேலிய அரசு மீண்டும் சமர்ப்பிக்கவுள்ளது.

இந்தச்சட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டால், ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகவும் பாரதூரமான சட்டமாக கருதப்படும் என்று சட்ட வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

இச்சட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் நியூசிலாந்து நாட்டவர்கள் உட்பட புலம்பெயர் பின்னணி கொண்ட பலர் பாதிக்கப்படுவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.






Share

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand