புதிய நாடு, புதிய நண்பர்கள், புதிய பள்ளி, என்ற பய உணர்வு ஒருபுறம் இருந்தாலும், ஆஸ்திரேலிய சமூகத்தில், ஒரு நாள் கூட தான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரவில்லை என்கிறார் சுஜிதா.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சுஜிதாவின் பாட்டனார் ஆஸ்திரேலியாவிற்கு வந்திருந்தபோது, ஒரு அதிர்ச்சிதரும் நிகழ்வு நடந்துள்ளது. சுஜிதாவின் பேரன்பையும் மதிப்பையும் பெற்றிருந்த பாட்டனாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரது இருதயத்தின் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாக வைத்தியர்கள் கூறியதை சுஜிதாவால் தாங்க முடியவில்லை.
ஆனால், ஆஸ்திரேலிய மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரைக் காப்பாற்றிவிட்டார்கள்.
அந்த மருத்துவர்களின் செய்பாட்டால் உந்தப்பட்ட சுஜிதா, இன்று இருதய மருத்துவ நிபுணராகி, வெஸ்ட்மீட் மருத்துவமனையில் கடமையாற்றுகிறார்.

தனது குடும்பத்தினருடன் சுஜிதா
"ஆஸ்திரேலிய சமூகத்தில், ஒரு நாள் கூட தான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரவில்லை"
#FirstDaySBS

ஆஸ்திரேலிய பள்ளி சீருடையில் சுஜிதா

அவரது பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளுடன் சுஜிதா
இன்று இருதய மருத்துவ நிபுணராகி, வெஸ்ட்மீட் மருத்துவமனையில் கடமையாற்றுகிறார் சுஜிதா. ImageSBS வானொலி கலையகத்தில் சுஜிதா Image
SBS வானொலி கலையகத்தில், குலசேகரம் சஞ்சயனுடன் நேர்காணல். #FirstDaySBS
