IS எனப்படும் Islamic State அமைப்பினருக்கு பணம் அனுப்பினார் என்ற குற்றச்சாட்டின்பேரில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் அரச ஊழியர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் Guildford பகுதியைச் சேர்ந்த 40 வயதுப் பெண் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சுமார் 30 ஆயிரம் டொலர்களை Western Union ஊடாக IS அமைப்பினருக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியப் பிரஜையான இப்பெண்ணை தாம் முன்பு அறிந்திருக்கவில்லை எனவும், இவர் உள்நாட்டில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதற்கான ஆதாரங்கள் எவையும் கிடையாது என்றும் நியூசவுத் வேல்ஸ் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
