SKIP TO MAIN CONTENT

காட்டுத்தீயிலிருந்து காப்பாற்றப்பட்ட Koala கருணைக்கொலை!

Toni Doherty with the koala.
Toni Doherty took off her own shirt to rescue the koala. Source: Nine Network

1 min read

Published

Updated


Skip to article content

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் காட்டுத்தீயில் சிக்கிய koala-வை பெண் ஒருவர் தனது உயிரைப் பயணம் வைத்து மீட்டிருந்தநிலையில் அது கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Toni Doherty என்ற நியூ சவுத் வேல்ஸ் பெண், காட்டுத்தீ காரணமாக உடலெங்கும் காயங்களுக்குள்ளான Lewis எனப் பெயரிட்டப்பட்ட koala-வை தனது மேலாடையைக் கழற்றிப் போர்த்தியதுடன் குடிநீரும் கொடுத்து காப்பாற்றியிருந்தார்.

இதையடுத்து Port Macquarie Koala மருத்துவமனையில் Lewis சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது.

எனினும் Lewis-க்கு ஏற்பட்ட தீக்காயங்கள் பாரதூரமானவை என்பதால் அதிலிருந்து மீள்வது இயலாமல் போனதையடுத்து அது கருணைக்கொலை செய்யப்படுவதாக Port Macquarie Koala மருத்துவமனை தனது முகநூலில் அறிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now