SKIP TO MAIN CONTENT

பிரியா-நடேஸ் குடும்பத்தை விடுதலை செய்யுமாறு முன்னாள் பிரதமர் Malcolm Turnbull வலியுறுத்தல்!

From left: Nades Murugappan, Kopika, Priya,and Tharnicaa.
From left: Nades Murugappan, Kopika, Priya,and Tharnicaa. Source: Supplied

1 min read

Published


Skip to article content

கிறிஸ்மஸ் தீவு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பத்தினரை ஆஸ்திரேலியாவின் புதிய உள்துறை அமைச்சர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி விடுதலை செய்யவேண்டும் என முன்னாள் பிரதமர் Malcolm Turnbull வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் ABC தொலைக்காட்சியின்  Q+A நிகழ்வில் கலந்துகொண்டபோது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்ட விடயத்தினை வலியுறுத்தியிருந்தார். 

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் எல்லைப்பாதுகாப்பு கொள்கை எனப்படுவதும் மிகவும் கடுமையானது என்பதை ஒப்புக்கொண்ட Malcolm Turnbull, பிரியா-நடேஸ் குடும்பத்தினரது தடுப்பு விடயத்தில் பரிவையும் மனிதாபிமானத்தையும் கொஞ்சமாவது காண்பிக்கவேண்டும் என்றார்.

பிரியா-நடேஸ் தம்பதிகளையும்  ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது குழந்தைகளையும் குயின்ஸ்லாந்துக்கு அனுப்புவதே சரியான முடிவாக இருக்கமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரியா-நடேஸ் குடும்பத்தினர் தடுப்புக்கு கொண்டுசெல்லப்படும்போதும், அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த கடைசிநேரத்தில் வழக்கொன்றின் மூலம் தடுத்துநிறுத்தப்பட்டபோதும் Malcolm Turnbull பிரதமராக பொறுப்பிலிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now