நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய மாநிலங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டு முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் நியூசிலாந்து இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
இன்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தையடுத்து நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern இம்முடிவினை அறிவித்தார்.
இன்று இரவு 11.59 மணிமுதல் இருநாடுகளுக்கிடையிலான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற விமானப்போக்குவரத்து இடைநிறுத்தப்படுவதாகவும், எதிர்வரும் நாட்களில் ஆஸ்திரேலியாவிலுள்ள நியூசிலாந்து நாட்டவர்கள் வீடுதிரும்ப ஏதுவாக மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மட்டும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து திரும்பும் அனைவரும் விமானப்பயணத்திற்கு முன்னதாக கோவிட் சோதனையை மேற்கொண்டு தமக்கு தொற்று இல்லை என்பதை நிரூபித்த பின்னரே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவர்.
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையே ஏப்ரல் 19ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்பயண ஏற்பாடு மூலம் சுமார் 3 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
இம்முடிவு இலகுவாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்லவெனவும் நியூசிலாந்தை ஆபத்தான டெல்டா பரவலிலிருந்து பாதுகாக்க இந்நடவடிக்கை அவசியமாவதாகவும் பிரதமர் Jacinda Ardern தெரிவித்தார்.
இதேவேளை நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய மாநிலங்களிலுள்ள சுமார் 14 மில்லியனுக்கும் மேற்பட்டோர் முடக்கநிலையில் உள்ள அதேநேரம் குயின்ஸ்லாந்திலும் புதிதாக சமூகப்பரவல் ஊடாக ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் கோவிட் சோதனையை எங்கே மேற்கொள்ளலாம் என்ற விவரங்களை கீழுள்ள இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் கோவிட் பேரிடர்கால கொடுப்பனவு எவ்வாறு உள்ளது என்பதை கீழுள்ள இணைப்புக்களுக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான விடயங்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்லவேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதிபெறவேண்டும். இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப்போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.