SKIP TO MAIN CONTENT

ஒருதொகுதி நவுறு அகதிகள் அமெரிக்கா புறப்படுகின்றனர்!

Some of the refugees about to leave Nauru en route to the US as part of the Australia-US refugee deal.
Some of the refugees about to leave Nauru en route to the US as part of the Australia-US refugee deal. Source: Supplied

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையே செய்துகொள்ளப்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின்படி, நவுறு தடுப்பு முகாமிலுள்ள ஒரு தொகுதி அகதிகள் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான், மியன்மார் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 22 அகதிகள், நவுறுவிலிருந்து Fiji வழியாக Los Angeles-க்கு செல்லவுள்ள நிலையில், இப்பயணம் குறித்த தகவல்களை இருநாட்டு அரசுக்களும் இரகசியமாகப் பேணுகின்றன.

இவ்வாறு அமெரிக்கா செல்லும் அகதிகள், அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டு, முதல் 3 மாதங்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்படும் அதேநேரம், ஒரு வருடத்தின் பின் அவர்கள் அங்கு நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்குத் தகுதி பெறுவர். பின் 5 வருடங்கள் கழித்து அமெரிக்க குடியுரிமை பெறமுடியும்.

இருநாடுகளுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்கீழ், இதுவரை மனுஸ் மற்றும் நவுறு தடுப்பு முகாமிலிருந்து 100 அகதிகள் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள பின்னணியில், அடுத்த தொகுதியினர் இன்று புறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now