நவுறு மற்றும் பப்புவா நியூ கினி நாட்டின் தடுப்பு முகாம்களிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த வேண்டுமென லேபர் கட்சி செனட்டர் Lisa Singh வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா சபையின் ஏற்பாட்டில் நியூயோர்க் நகரில் நடைபெறும் அகதிகள் குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட அவர் Sky News க்கு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
Lisa Singh சார்ந்திருக்கும் லேபர் கட்சியும், நவுறு மற்றும் மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தாமல் மூன்றாவது நாடொன்றில் மட்டுமே குடியர்த்துவது என்பதை கொள்கையாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
