ஆஸ்திரேலியா வரவேண்டும் என்பதற்காக நவுறு தடுப்பு முகாமிலுள்ள சில புகலிடக்கோரிக்கையாளர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொள்வதாகவும் பொய்யான முறைப்பாடுகளைச் செய்வதாகவும் குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.
நவுறு தடுப்பு முகாமில் 2013-2015 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தமக்குத் தாமே தீங்கிழைத்தல் மற்றும் முறைகேடாக நடத்தப்பட்ட 2000 சம்பவங்கள் பற்றிய தகவல்களை The Guardian வெளியிட்டிருந்தது.
இந்த விடயம் பற்றி கருத்து வெளியிட்டுள்ள குடிவரவு அமைச்சர் Peter Dutton குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நவுறு அதிகாரிகள் கவனம் செலுத்துவார்கள் எனத் தெரிவித்துடன் சில முறைப்பாடுகளில் உண்மை இல்லை எனவும் அவை உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் எனவும் தெரிவித்தார்.
