SKIP TO MAIN CONTENT

புலிகள் அமைப்பை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு!

LTTE Flag
LTTE Flag Source: Public domain

1 min read

Published

Updated

Presented by Renuka.T


Skip to article content

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத தடுப்பு பட்டியலிலிருந்து, நீக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விடுதலை புலிகள் கடந்த 2009-ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்த தாக்குதல்களிலும் ஈடுபடவில்லையென்றும்,அவர்கள் தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் சமர்பிக்கவில்லை என்றும், அந்த அமைப்பின் நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கடந்த 2006-ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டது.

இந்தநிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக பட்டியலிடுவதற்கு பயன்படுத்திய முறைமை குறித்தே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், கடந்த 2011- 2015ம் ஆண்டு காலப் பகுதி வரையிலான மதிப்பீடுகளின் அடிப்படையில் ஐரோப்பிய நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள ஐரோப்பிய ஒன்றியம்,  2015 - 2017ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியின் அடிப்படையில், புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே பட்டியலிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் நீதிமன்றின் தீர்ப்பு உன்னிப்பாக ஆராயப்பட்டு, தேவை ஏற்படின் தடை உத்தரவு குறித்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now