ஆஸ்திரேலியாவிலிலுள்ள குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் போஷாக்குள்ள உணவுகளை வழங்குவதில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிவித்து ஆஸ்திரேலியாவின் இலாபநோக்கற்ற சுகாதார அமைப்பொன்றின் தலைவர்- 46 நாட்கள் விழிப்புணர்வு உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
Healthy Australia எனப்படும் அமைப்பின் தலைவர் Ruby O'Rourke இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
'ஆஸ்திரேலியாவிலுள்ள பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள், குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் உணவு உட்கொள்கின்றன. ஆனால், அப்படிப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் போஷாக்குள்ள உணவுகளை வழங்குவதில் சரியான நடைமுறைகளும் தராதரங்களும் பின்பற்றப்படுவதில்லை. அரசாங்கமும் இது தொடர்பில் திருப்தியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை'- என்று கூறியுள்ள Ruby O'Rourke இந்த விடயம் குறித்து தேசியளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு தான் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
