ஆஸ்திரேலியாவில் பாதசாரிகளால் ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்கும் முகமாக சாலை விதிகளை பின்பற்றாமல் கவனக்குறைவாக சாலையை கடக்கும் பாதசாரிகளுக்கு 200 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இதேவேளை பாதசாரிகளுக்கான பச்சை சமிக்ஞையில் பாதசாரிகள் சாலையை கடக்கும் போது கைபேசியை பாவித்தால் அபராத தொகை அதிகரிக்கப்படக்கூடும்.
பாதசாரிகளின் பாதுகாப்பிற்கு இவ்வகையான கடுமையான தண்டனைகள் அவசியம் ஏனெனில் சாலையை கடக்கும் போது பாதசாரிகளின் கைபேசி பாவனை மிகவும் மூர்க்கத்தனமாக உள்ளது என The Pedestrian Council of Australia கூறியுள்ளது.
Share
