கனடா டொறன்டோவிலுள்ள இந்திய உணவகம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 15க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
கனடிய நேரப்படி இன்று காலை 10.30 மணியளவில் Mississauga பகுதியிலுள்ள வணிக வளாகத்தில் உள்ள இந்திய உணவகத்தில் இச்வெடிப்பு நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த உணவகத்திற்குச் சென்ற இருவர் குண்டொன்றை வெடிக்க வைத்ததாக நம்பப்படுகிறது.
இதேவேளை குண்டுவெடிப்புக்கான காரணம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்த Deputy Chief Brian Gibson காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்தார்.
