Share
இலங்கையில், மத ஊர்வலத்தில் மதம் வந்த யானைகள்!
இலங்கையில், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமகா விகாரையில் இடம்பெற்ற வருடாந்த தலதா பெரஹராவில் கலந்துகொண்ட இரண்டு யானைகள் குழப்பமடைந்ததால் குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த் 13 பெண்களும் 4 ஆண்களும் ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களுபோவில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த பௌத்த கோயில் யானைகள் ஏதோ காரணத்தால் குழப்பமடைந்து யானைப்பாகனின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறி மக்களிடையே பீதியை ஏற்படுத்திய காணொளி இது.

Published
Updated
By SBS News, Kulasegaram Sanchayan
Source: SBS
Share this with family and friends