SBS தமிழ் ஒலிபரப்பின் தீபாவளி விளக்கு/கார்த்திகை தீபம்– ஓவியம் வரைதல் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான பரிசாக தலா 150 டொலர்கள் பெறுமதியான கூப்பனும் வழங்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களின் விவரம் பின்வருமாறு:
- பதுமிகா கிருபாகரன்
- கவின் தமிழ்வேந்தன்
- தினுஷிகா தனபாலசுந்தரம்
- பிரஷிதா கார்த்திகேயன்
- லுமியா கஜேந்திரன்
- வந்தனா விஜயாலயன்
- ஸ்ரீநாத் விஜயகுமார்
இதேவேளை தீபாவளி விளக்கு/கார்த்திகை தீபம்– ஓவியம் வரைதல் போட்டிக்கென அனுப்பிவைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களில் தெரிவுசெய்யப்பட்ட ஓவியங்களின் தொகுப்பு நமது Facebook பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நமது வாழ்த்துகள். அதேநேரம் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.