SKIP TO MAIN CONTENT

'தமிழர்கள் உட்பட 13 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கவுள்ள சிங்கப்பூர் அரசு'

FMT
Source: freemalaysiatoday.com

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

போதைப்பொருள் தொடர்பிலான வழக்கில் தண்டனை பெற்ற மூன்று தமிழர்கள் உட்பட 13 பேரது கருணைமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான மரண தண்டனையை சிங்கப்பூர் அரசு எந்நேரமும் நிறைவேற்றலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

உத்தியோகப்பூர்வமாக சிங்கப்பூர் அரசு இந்த தகவலை வெளியிடாதபோதும், மரண தண்டனை கைதிகளுக்கான சட்ட உதவிகளை மேற்கொண்டுவருகின்ற மலேசிய வழக்கறிஞர் இந்த செய்தியைக் கூறினார்.

மலேசியாவை சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம், பன்னீர்செல்வம் பரந்தாமன், கோபி ஆவுடையான், தட்சணாமூர்த்தி கந்தையா ஆகியோர் தொடர்பிலான விவரங்களை கையாண்டுவரும் வழக்கறிஞர் சுரேந்திரன், இது தொடர்பாக கூறும்போது - மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 13 பேர் சிங்கப்பூர் அரசிடம் கருணை மனு விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் அனைவரது மனுக்களும் அண்மையில் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவர்கள் அனைவருக்குமான தண்டனை மிகவிரைவில் - இரகசியாக - நிறைவேற்றப்படலாம் என்று கூறினார்.

மலேசியாவை சேர்ந்த மேற்படி நால்வரில் ஒருவரது கருணை மனு நிராகரிக்கப்படாதபோதும் மிகுதி அனைவரதும் மனுக்கள் அண்மையில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இரகசியமான முறையில் தூக்கிலிட்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் முறையை பின்பற்றிவரும் சிங்கப்பூர் அரசு, 2005 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய இளைஞன் Nguyen Tuong Van-க்கு இவ்வாறான தண்டனையை நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now