தமிழ்க்குடும்பத்தின் நாடுகடத்தலைத் தடுக்குமாறு கோரி கையெழுத்து மனு!

Rod Hysted

Source: Rod Hysted.

நாடுகடத்தப்படவுள்ள நிலையில் மெல்பேர்ன் தடுப்புமுகாமில் வைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்குமாறுகோரி சேரிக்கப்பட்ட ஏறக்குறைய 1 லட்சம் கையெழுத்துக்கள் உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

புகலிடம்கோரி ஆஸ்திரேலியா வந்த நடேசலிங்கம்-பிரியா தம்பதி மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 2 வயது மற்றும் 9 மாதக் குழந்தைகள் பல காலமாக குயின்ஸ்லாந்தின் Biloela-வில் வாழ்ந்து வந்த நிலையில், அவர்களது bridging visa கடந்த தை - மாசி மாதமளவில் காலாவதியாகியிருந்ததையடுத்து, அவர்கள் நாடு கடத்தப்படும் நோக்கில் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நடேசலிங்கம்-பிரியா குடும்பம் நாடுகடத்தப்படுவதற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றிருந்தநிலையில் இவ்வழக்கின் மீதான தீர்ப்பு இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

இந்தப் பின்னணியில் நடேசலிங்கம்-பிரியா தம்பதியின் நாடு கடத்தலைத் தடுக்கக்கோரி குறித்த தம்பதி வாழ்ந்து வந்த Biloela பகுதியைச் சேர்ந்த Angela Fredericks என்பவரின் முன்னெடுப்பில் கையெழுத்து வேட்டை ஒன்று நடத்தப்பட்டது.

இக்கையெழுத்து வேட்டையூடாக திரட்டப்பட்ட 98 ஆயிரம் கையெழுத்துக்கள் உள்துறை அமைச்சர் Peter Dutton-இடம் சமர்ப்பிக்கப்பட்டதாக Angela Fredericks தெரிவித்தார்.




Share

1 min read

Published

Updated

Presented by Renuka



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand