சிட்னி Pendle Hill பகுதியில் Gilba வீதியில் தமிழ் அகதி ஒருவர் அகால மரணமடைந்துள்ளார்.
மேர்வின் பெர்னாண்டோ என்ற இலங்கையின் மன்னார் பேசாலையைச் சேர்ந்த 24 வயது இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இன்று மதியம் 1.30 மணியளவில் இம்மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது மரணம் குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
இச்செய்தி குறித்த மேலதிக விபரங்களை SBS தமிழ் ஒலிபரப்பில் எதிர்பாருங்கள்.
If you are experiencing a personal crisis and need someone to talk to, please call:
Lifeline on 13 11 14 or
Beyond Blue on 1300 22 4636


