சிட்னியில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மரணம்!

சிட்னியில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது.

Parameshwaran

Source: Tamil Refugee Council

நியூ சவுத் வேல்ஸ் மாநிலம், Regents Parkஇல் ரட்ணசிங்கம் பரமேஸ்வரன் என்ற தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் இன்று காலை தூக்கத்திலேயே மரணமடைந்ததாகவும்,இவருக்கு வயது 48 எனவும் தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

ரட்ணசிங்கம் பரமேஸ்வரனின் அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அதேநேரம், மேன்முறையீட்டு வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திவிட்டநிலையில் இவர் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்ததாக அரன் மயில்வாகனம் தெரிவித்தார்.

வேலை செய்வதற்கான உரிமையும் இவருக்கு மறுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ரட்ணசிங்கம் பரமேஸ்வரனின் பிள்ளைகளும், மனைவியும் இலங்கையில் உள்ளதாகவும், தனது தந்தையை சுமார் 12 ஆண்டுகளுக்கு மேல் பார்க்கவில்லை என 25 வயது மகன் தன்னிடம் தெரிவித்ததாகவும் அரன் மயில்வாகனம் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தமை, மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் போன்றவற்றின் கூட்டுவிளைவாக, இவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்தில் இரு புகலிடக்கோரிக்கையாளர்கள் மரணமடைந்துள்ளதாகவும், புதிய அரசு ஆட்சிக்கு வந்திருந்தாலும் அகதிகள் விடயத்தில் பெரியளவில் எதுவும் மாறவில்லை எனவும் அரன் மயில்வாகனம் குற்றம்சாட்டியுள்ளார்.

If you are experiencing a personal crisis and need someone to talk to, please call: Lifeline on 13 11 14 or Beyond Blue on 1300 22 4636


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Share

Published


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
சிட்னியில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மரணம்! | SBS Tamil