'Thunderstorm asthma' குறித்த முக்கிய தகவல்!

A stock image of a Ventolin inhaler in Melbourne

Source: AAP

விக்டோரியா மாநிலத்தில் இன்று வெப்பநிலை அதிகமாகக் காணப்படுவதுடன் பிற்பகல் புயற்காற்று வீசலாம் என்பதால் மீண்டும் 'Thunderstorm asthma' நோய் தாக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது.

எனவே இன்று பிற்பகல் முதல் நாளை காலை வரை ஆஸ்துமா, hay fever, மற்றும் Pollen ஒவ்வாமை உள்ளவர்கள் உரிய முன்னேற்பாடுகளுடன் இருக்குமாறு National Asthma Council தலைவர் Dr Jonathan Burdon எச்சரித்துள்ளார்.

அதேநேரம் விக்டோரியா மாநிலம் முழுவதும் மேலதிக ambulance குழுவினரும் அவசர சேவைப் பிரிவினரும் தயார் நிலையில் உள்ளனர். 

இதேவேளை சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் எப்போதும் தம்முடன் Ventolin போன்ற மருந்துகளை  வைத்திருப்பது நல்லதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தாம் வழக்கமாக பயன்படுத்தும் மருந்துகளால் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், உடனடியாக மருத்துவ உதவிபெறவேண்டும் எனவும், ambulance வருவதற்குத் தாமதமானாலோ அல்லது உடனடியாக அங்கு வரமுடியாத சூழல் காணப்பட்டாலோ வேறு ஏதாவது வாகனத்தில் பாதிக்கப்பட்ட நபரை மருத்துமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தவிர வழக்கமாக ஆஸ்துமா வராத ஒருவருக்கு திடீர் சுவாசக்கோளாறு ஏற்பட்டாலும் உடனடி மருத்துவ உதவி பெறவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 21ம் திகதி இதுபோன்ற வானிலை மாற்றத்தால் 'Thunderstorm asthma' ஏற்பட்டதில்  8 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



 

Share

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: ABC Australia



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand